02-பசுமையான புல்வெளி |
|
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே என் மேய்ப்பவரே…நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா 1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் 2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர் 3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே 5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே 6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர் எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர் |