Rasaali - Video Promo | Achcham Yenbadhu Madamaiyada | A R Rahman | STR, Manjima Mohan |
|
Celebrating Isai Puyal A.R. Rahman's “Rasaali.." from Gautham Vasudev Menon's "Achcham Yenbathu Madamaiyada" ; Video Promo of "Rasaali"
Song Credits - Music : A R Rahman - Lyrics : Thamarai - Singers : Sathya Prakash, Shashaa Tirupati ஆ : பறக்கும் ராசாளியே, ராசாளியே நில்லு... இங்கு நீ வேகமா? நான் வேகமா? சொல்லு... கடிகாரம் பொய்சொல்லும் என்றே நான் கண்டேன்... கிழக்கெல்லாம் மேற்காகிடக் கண்டேனே... பெ : பறவை போலாகினேன் போலாகினேன் இன்று... சிறகும் என்கைகளும் என்கைகளும் ஒன்று... ஆ : ராசாளி...பந்தயமா? பந்தயமா? நீ முந்தியா? நான் முந்தியா பார்ப்போம்...பார்ப்போம்... முதலில் யார் சொல்வது, யார் சொல்வது, அன்பை? முதலில் யார் எய்வது, யார் எய்வது அம்பை? மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல... வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல... கனவுகள் வருதே...கண்ணின் வெளியே... என் தோள் மீது நீ - குளிர் காய்கின்ற தீ... சரணம் - 1 ஆ : எட்டுத் திசை முட்டும் எனைப் பகலினில் கொட்டும் பனி மட்டும் துணை இரவினில் நெட்டும் ஒரு பட்டுக் குரல் மனதினில்...மடிவேனோ! முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில் பின்னில் சிறு பச்சைக் கிளி முதுகினில் வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட...விடுவேனோ! ராசாளீ...பந்தயமா? பந்தயமா? முதலில் யார் சொல்வது, யார் சொல்வது, அன்பை? முதலில் யார் எய்வது, யார் எய்வது, அம்பை? ( நின்னுக்கோரி...நின்னுக்கோரி ) சரணம் - 2 பெ : வெயில் மழை வெட்கும்படி நனைவதை விண்மீன்களும் வீம்பாய் எனைத் தொடர்வதை ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை...மறவேனே! முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன் என சொல்லும்படி நினைவிலை இன்னும் எதிர் காலத்திலும் வழியிலை...மறவேனே! ஆ : ராசாளி...பந்தயமா? பந்தயமா? முதலில் யார் சொல்வது, யார் சொல்வது, அன்பை? முதலில் யார் எய்வது, யார் எய்வது அம்பை? மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல... வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல... கனவுகள் வருதே...கண்ணின் வெளியே... என் தோள் மீது நீ - குளிர் காய்கின்ற தீ... என் தோள் மீது நீ - குளிர் காய்கின்ற தீ... குளிர் காய்கின்ற தீ... 'Achcham Yenbadhu Madamaiyada' Directed by Gautham Vasudev Menon, starring STR, Manjima Mohan. Music composed by A.R.Rahman. In Association with Divo http://www.facebook.com/divomovies https://twitter.com/divomovies |